கோவை செட்டிபாளையம் பகுதியில் வருகிற 23 ம் தேதி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் மூன்றாமாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு சங்க தலைவர் அன்பரசன்,செயலாளர் தங்கவேலு,தமிழ்நாடு ரேக்ளா பேரவை தலைவர் அர்ஜூனன் மற்றும் காவல்துறையினர் ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் ஏற்பாட்டு பணிகளை பார்வையிட்டனர்.