இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு கோவை ராஜவீதியில் நடந்த விநாயகர் சதுர்த்தி துவக்க விழா மேடையில், கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு சேவகச் செம்மல் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து விஜய் குறித்து விமர்சித்து வரும் அர்ஜீன் சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த விருதினை தபால் மூலம் திருப்பி அனுப்பும் போராட்டத்தை விஜய் ரசிகர்கள் மேற்கொண்டனர்.